• Hello Friends You can Register on the Forum and by posting you can earn money too.

இதயப் பூவும்.. இளமை வண்டும் - 73

sexstories

Administrator
Staff member
காலையில் நேரமே எழுந்து விட்டான் சசி. இரவெல்லாம் அவனுக்கு சரியான தூக்கமே இல்லை.
புவியாழினியின் அவமதிப்பும்.. ராமுவின் இந்த நயவஞ்சகமும் அவனை நிம்மதியின்றி தவிக்க வைத்துவிட்டது.

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

தமிழ்காமவெறி தளம்

அவன் குளிக்கக்கூட இல்லை. அவனுக்கு புவியாழினியைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டான். அவன் போனபோது.. வாசலில் நின்று பல் தேய்த்துக் கொண்டிருந்தாள் புவியாழினி.
சைக்கிளை நிறுத்திவிட்டு அவள் பக்கத்தில் போனான்.
"கவி எங்க..?"

எச்சிலைத் துப்பிவிட்டு
"உள்ளருக்கா..?" என்றாள்.

"டிபன் செய்றாளா..?" சுற்றி வளைத்தான்.

"ம்..!!"

"இன்னிக்கு ஸ்கூல் இருக்கா உனக்கு..?"

"ம்..!ஏன்..?" அவனை நேராகப் பார்த்தாள்.

சுற்றிவளைப்பது வீண்.!
பாக்கெட்டில் இருந்து.. அவன் மொபைலை எடுத்தான்.
அவளும் ராமுவும் இணைந்து எடுத்த போட்டோவை அவளிடம் காட்டினான்.
"இதுக்கு என்ன அர்த்தம்..?"

அதைப் பார்த்ததும் துல்லியமாக அதிர்ந்தது அவள் முகம். அவள் முக மாறுதலை நன்றாகக் காண முடிந்தது.
அதிச்சி குறையாத முகத்துடன்.. தடுமாற்றத்துடன் கேட்டாள்.
" இ.. இது.. இது.. எப்படி..?"

"லவ் பண்றியா..?" அவனது குரல் அவனுக்கே கேட்காது போலிருந்தது.

சுற்றும் முற்றும் பார்த்தாள். இரண்டு வீட்டுக் கதவுகளையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு.. அவனை நேராகப் பார்த்தாள்.
அவள் முகத்தில் கோபக்கணல் தெரிந்தது.
"என்னோட பர்ஸ்னல்ல.. ரெண்டு பேரும்.. ரொம்ப மூக்க நொழைக்கறீங்க போலருக்கு.. எனக்கு தெரியாம என் போட்டோவ திருடறது.. மொபைல செக் பண்றது..வெக்கமா இல்லை..? சீ..?"என்றாள்

அவளது கோபத்தை அவன் பொருட்படுத்தவில்லை.
"அதவிடு இவன நீ லவ் பண்றியா இல்லையா..?" என மீண்டும் கேட்டான் சசி.

புவியின் முகம் சிவந்துவிட்டது.
"நா யார லவ் பண்ணா உனக்கென்ன. .?" என சீறினாள்.

"நீ யாரவேனா லவ் பண்ணு.. அது எனக்கு முக்கியம் இல்ல.. இவன பண்றியா..அத மட்டும் சொல்லு.."

அவனைக் கடுமையாக முறைத்தாள்
"உனக்கெல்லாம் நா எதுக்கு பதில் சொல்லனும்..?" என முகத்திலடித்தது போலக் கேட்டாள் "அது என் இஷ்டம்.."

தாக்கப்பட்டான் சசி. அவன் இதயம் நொருங்கியது. மெதுவாக அவன் மனதை திடப்படுத்திக்கொண்டு..
"நீ யார லவ் பண்றேங்கறதப் பத்தி எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்ல.. ஆனா.." என்க..

வெடித்தாள் புவி.
"போதும் நிறுத்திக்கோ. உன்னோட அட்வைஸ்லாம் இங்க எவளுக்கும் தேவையே இல்ல.. எனக்கு அட்வைஸ் பண்ற தகதியும் உனக்கெல்லாம் சுத்தமா இல்ல. உன்ன மாதிரி ஒரு லுச்சாகிட்ட என் காதல பத்தி பேசக்கூட நா விரும்பல.. அப்படி பேசினா அது என் காதலுக்குத்தான் அசிங்கம்.. மரியாதையா அந்த போட்டோவ டிலேட் பண்ணிரு.. இல்ல.."

"இலலேன்னா..?"

"உன்ன பத்தி எதுவும் எனக்கு தெரியாதுனு நெனச்சியா..?" குரல் உயர்த்திப் பேசினாள் "உன்ன என் பர்த்டே அப்பவே வார்ன் பண்ண நெனச்சேன்.. போனா போகுதுனு விட்டு வெச்சேன்.. என் போட்டோவ திருடி எனக்கே கிப்ட்டா தர்ரியா..? தூ..! வெக்கமால்ல இப்படி பண்ண..? போனா போகுதுனு விட்டா நீ ரொம்ப ஓவராத்தன் போய்ட்டிருக்க..? இதோட விட்று அதான் உனக்கு நல்லது.. இல்ல.. மரியாதை கெட்றும்.." என்ற அவளது உடம்பு மொத்தமும் கோபத்தில் படபடத்துக் கொண்டிருந்தது.

உள்ளுக்குள் உடைந்தான் சசி. அவளிடமிருந்து இப்படி ஒரு ஆவேசத்தை அவன் எதிர்பார்க்கவே இல்லை. ஆனாலும் விடாமல்.
"இத உங்கம்மாகிட்ட காட்னேனு வெய்.." என்றான்.

"என்ன பிளாக்மெயில் பண்றியா..?" அலட்சியமாகப் பேசினாள் "காட்டிட்டு போ.. ஐ டோண்ட் கேர்.. அத நா ஈஸியா சமாளிச்சிருவேன். ஆனா மவனே.. நீ அப்படி இல்ல என்னென்ன பண்ற.. எவ எவள வெச்சிருக்கேனு ஓபன் பண்ணேனு வெய்.. நாறிருவே.. நாறி.." என்றாள்.

இந்த தாக்குதலை எதிர் பார்க்காத சசி மிகவும் அதிர்ந்து போய் நின்றான். அவன் முகம் சிறுத்துப் போனது. அவள் முன்பாக பேச நா எழாமல்.. குன்றிப் போய் நின்றான்.
சசிக்கும் அண்ணாச்சியம்மாவுக்கும் உள்ள தொடர்பை.. ராமு இவளிடம் சொல்லிவிட்டான் என்பது மிக நன்றாகவே புரிந்தது.
ராமு தன்னை எப்படி ஓரம்கட்டியிருக்கிறான் என்பது மிக நன்றாகவே புரிந்தது.

புவியிடமிருந்து இப்படிப் பட்ட ஒரு தாக்குதலை எதிர் பார்க்காத சசி நிலைகுழைந்து போனான்.
அவ்வளவுதான் இனி புவியை சமாதானம் செய்து.. அவள் மனதை தன்வசம் கொண்டு வருவது சாத்தியமே இல்லாத ஒரு விசயம் என்பது அவனுக்கு புரிந்து போனது.

"அந்த மொபைல குடு.." என கை நீட்டினாள்.

சத்தமின்றி எடுத்து அவளிடம் கொடுத்தான். வாங்கியவள்.. அவள் கையாலேயே அந்த போட்டோவை டிலேட் பண்ணினாள்.

சசி மெதுவாக.. "நீ நெனைக்கற மாதிரி.. அவன்..ஒன்னும் நல்லவன் இல்ல.. "என்க

"அவன பத்தி பேச உனக்கு எந்த அருகதையும் இல்ல.." எனச் சீறினாள் "அவனபத்தி எனக்கு எல்லாம் தெரியும்.. நீ ஒன்னும் சொல்ல வேண்டாம். இனிமே என் வழில நீ குறுக்க வந்தே.. மகனே.. நீ நாறிருவ நாறி.. ஜாக்கிரதை.."என்றாள் புவியாழினி.

துண்டு துண்டாக உடைந்தான் சசி.
புவி என்கிற அவனது இதய ராணி.. அவனை துண்டு துண்டாக உடைத்து வீசிய வேதணையுடன் அந்த இடத்தைவிட்டு அகன்றான் சசி..!!

கட்டிங் டேபிள் மீது துணியை விரித்து கோடு போட்டுக்கொண்டிருந்தான் ராமு.
சசியைப் பார்த்ததும் இயல்பாகப் புன்னகைத்தான்.
ஆனால் சசியால் அப்படி புன்னகைக்க முடியவில்லை. அவன் முகம் இருகி.. ரத்தம் சுண்டி வெளுத்துப் போயிருந்தது.
அவன் சுவாசம் சீராக இல்லை. அவன் மனசு எரிமலைக்குழம்பாகக் கொதித்துக் கொண்டிருந்தது.
தோல்வி.. அவமானம்.. இயலாமை.. வேதனை எல்லாமாகச் சேர்ந்து.. அவனது இதயத்தைப் பிசைந்து கொண்டிருந்தது. விழுங்க முடியாத துக்கம் அவன் தொண்டையை இருக்கிப் பிடித்திருந்தது.
அவன் சிரிக்காமல் இருப்பதையும்..அவன் முகம் இருண்டு கிடப்பதையும் கண்டு ராமு கேட்டான்.
"ஏன்டா.. என்னாச்சு..? ஒரு மாதிரி இருக்க..?"

ராமுவின் முகத்தை நிமிர்ந்துகூடப் பார்க்கவில்லை சசி. அவன் முகத்தைப் பார்த்தாலே கொலை செய்து விடும் ஆத்திரம் வரும் போலிருந்தது..!
'துரோகி.. வஞ்சகன்..' என அவன் மனம் குமறியது.

மறுபடி ராமு "உடம்பு சரியில்லையாடா..?" என்று கேட்டான்.

சட்டென வெடித்தான் சசி.
"நீ இவ்வளவு பெரிய துரோகியா இருப்பேனு நான் நெனக்கவே இல்லடா.."

திடுக்கிட்டான் ராமு.
"எ.. என்னடா.. சொல்ற..?"

"பேசாதடா..! கொன்றுவேன்.. நீயெல்லாம் ஒரே பிரெண்டா.. துரோகி.. சீ.."

அதிர்ந்துபோய் பார்த்தான் ராமு.

சசியின் கண்கள் கணன்று கொண்டிருந்தது. அவன் முகத்தில் கொப்பளித்த கோபமும்.. கண்களில் தெரிந்த அக்னி கணலும்..ராமுவை சுட்டெரித்தன.
அடிவயிறு கலங்கிப் போன ராமு வாயைத் திறந்தான் ஆனால் வார்த்தை வரவில்லை.

"அப்படி நான் என்னடா கொடுமை பண்ணிட்டேன் உனக்கு..? இப்படி என்னை அசிங்கப்படுத்திட்டியே.. நீயெல்லாம் ஒரு நண்பன்னு நம்பினேனே." இயலாமையில் சசியின் குரல் அழகைக்கு மாறிவிடும் போலிருந்தது..!

ராமு மெல்ல.. "நீ என்ன பேசறேனே புரியலடா.." என்றான்.

பற்றிக் கொண்டு வந்தது ஆத்திரம்..! வேதனை.. வெறுப்பு.. விரக்தி.. கோபம்.. வெறி என நொடிக்கு நொடி.. அவன் மனநிலை மாறி.. மாறிக் கொந்தளித்தது.

வெறுப்போடு கத்தினான் சசி.
"அண்ணாச்சியம்மா பத்தி அவகிட்ட சொன்னியா..?"

"எ..எவகிட்ட..?"

"அவதான்..அந்த வெங்காய காதலி..? அந்தக. யழகிகிட்ட.?"

ராமு அதிர்ச்சியடைந்தான். அவனுக்கு விசயம் புரிந்துவிட்டது. மிகவும் தடுமாறினான்.

"உன்ன நம்பினதுக்கு நல்ல பாடம் கத்துக்குடுத்துட்ட..டா.. ச்சே.. நீயெல்லாம் ஒரு மனுஷன்.." என வெறுப்போடு கத்திவிட்டு.. அதற்குமேல் அங்கு நிற்க முடியாமல் வேகமாக வெளியே போனான் சசி..!!!!

- வளரும்..!!!!

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

தமிழ்காமவெறி தளம்

இதயப் பூவும்.. இளமை வண்டும் - 73
 
Back
Top